நீங்கள் பீட்டர்பாலுடன் வாழ விருப்பப்பட்டால் தாராளமாக வாழலாம்; நடிகை வனிதா பரபரப்பு தகவல்

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், மீடியா மூலம் காரசாரமாக பேட்டி அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னுடைய கணவரை வனிதா கைப்பற்றி விட்டார் என்றும் தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் பீட்டர்பால் துரோகம் செய்துவிட்டார் என்றும் எலிசபெத் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி வடபழனி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பீட்டர்பாலை பிரிந்துவிட்டதாக வனிதா வெளியிட்டுள்ள வீடியோவில் எலிசபெத் அவர்களிடம் வனிதா வருத்தம் தெரிவித்துள்ளார். உங்களுடைய கணவரை நான் கைப்பற்ற வேண்டும் என்று ஒருநாளும் நான் எண்ணவில்லை. நீங்களும் அவரும் தனித்தனியாக பிரிந்துதான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அதனால்தான் பீட்டர் பாலுடன் எனக்கு உறவு ஏற்பட்டது அவர் கூறினார்.

மேலும், மருத்துவமனையில் பீட்டர்பால் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து நான் கையெழுத்து போட முடியாத நிலையில், உங்களுக்கு தகவல் தெரிவித்தேன். உங்கள் மகனுக்கும் தகவல் தெரிவித்தேன். நீங்கள் இருவருமே எந்தவிதமான ரெஸ்பான்ஸும் செய்யவில்லை.

மேலும் உங்களை நான் ஏதாவது ஒரு விதத்தில் மனக்காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பீட்டர்பாலுடன் வாழ விருப்பப்பட்டால் தாராளமாக வாழலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்களையும் பீட்டரையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்தது இல்லை. எனக்கும் உங்களுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. நீங்கள் மீடியாவிடம் சென்றதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டது. என்னிடம் தனிப்பட்ட முறையில் நீங்கள் பேசி இருந்தால் இந்த பிரச்சினையே எழுந்திருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்

மேலும் நான் எவ்வளவு பார்த்து விட்டேன் இன்னும் எவ்வளவோ பார்க்க தயாராக இருக்கிறேன் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்று வனிதா விஜயகுமார் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.