ரிலீஸ் ஆன 2 நாட்களில் ரூ.19 கோடி வசூலித்தது வெந்து தணிந்தது காடு படம்

சென்னை: வெந்து தணிந்தது காடு படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.19 கோடி வசூலித்துள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் சிறப்புகாட்சிகள் இல்லாமலேயே இரண்டாவதுநாள் ரூ.8.51 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் இரண்டுநாள் சேர்த்து ரூ. 19.31 கோடி வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் (வியாழக்கிழமை) வசூல் 10.86 கோடி இரண்டாவது நாள் (வெள்ளிக்கிழமை) வசூல் 8.51 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.