ரசிகரின் திருமணத்தை மனைவியுடன் வந்து நடத்தி வைத்த விஜய் சேதுபதி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் தலைமையில் அவரது ரசிகரின் திருமணம் நடந்துள்ளது. அவர் நடத்தி வைத்துள்ள முதல் சுயமரியாதை திருமணம் இதுவாகும். ரசிகரின் திருமணத்திற்கு தனது மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வனாக வலம் வரும் ஒரு பிரபலம். நாயகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும், இதுபோன்ற படங்கள் தான் நடிக்க வேண்டும் என்பதை உடைத்து புதிய பாதையில் பயணித்தவர்.

கடந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன், DSP போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் சில படங்கள் மட்டுமே நன்றாக ஓடியது, ரசிகர்கள் அவர் பெரிய ஹிட் படம் கொடுக்க வேண்டும் என புதிய படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் தலைமையில் அவரது ரசிகரின் திருமணம் நடந்துள்ளது. மக்கள் செல்வன் நடத்தி வைத்துள்ள முதல் சுயமரியாதை திருமணம் இதுவாகும். ரசிகரின் திருமணத்திற்கு தனது மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் செய்துள்ளார்.