அரண்மனை 4 படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.15 கோடி சம்பளமாம்

சென்னை: அரண்மனை 4 படத்திற்கு விஜய் சேதுபதி ரூ.15 கோடி சம்பளம் வாங்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2014 -ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2ம் பாகம் 2016-ல் வெளிவந்தது. இப்படத்திற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதனால் நடிகர் ஆர்யாவை வைத்து அரண்மனை 3ம் பாகம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும். ரசிகர்கள் இதற்கு கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

இதைதொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4ம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் விதமாக சுந்தர்.சி பிறந்தநாள் கொண்டாண்ட போட்டோவும் வந்திருந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திற்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படத்திற்காக 15 கோடி சம்பளம் வாங்க போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.