பிக்பாஸ் பிரதீப்பிற்கு ஆதரவாக எழும் குரல்கள்: செய்தது சரியில்லையாம்!!!

சென்னை: பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். அன்றைய முழு எபிசோட் பிரதீப் வழக்கில் தான் நகர்ந்தது. இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.

பூர்ணிமா, நிக்சன், மாயா, ஜோவிகா, விக்ரம், மணி என பலரும் பிரதீப்புடைய நடவடிக்கை சரியில்லை, அவர் பேசும் வார்த்தைகள் சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தங்களுடைய உரிமை குரலை எழுப்பினார்கள்.

இதை விசாரித்த கமல் இறுதியில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் அவருக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள்.

நடிகர் கவின், தொகுப்பாளினி பிரியங்கா போன்ற நட்சத்திரங்கள் இந்த முடிவு சரியில்லை என்பது போல் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அதே போல் ரசிகர்கள் பலரும், பிரதீப் தான் உண்மையான பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர். அவர் டைட்டில் வின்னர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் தான் மற்றவர்கள் இப்படி செய்தார்கள் என்று கூறி வருகிறார்கள்.

இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ப்ரதீப் தனது சமூக வலைதளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் பெற்ற கோப்பைகள்’ என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.