சந்திரமுகி 2 படத்தில் திரிஷா நடிக்க மறுப்பு தெரிவித்தது எதனால்?

சென்னை: சந்திரமுகி 2 படத்தில் நடிக்க திரிஷா மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் குறித்து கோலிவுட் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.

கடந்த 2005ம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா,நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் நகைச்சுவை நாயகனாக வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். மேலும், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஜிகர்தண்டா 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், சந்திரமுகி - 2 படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க நடிகை திரிஷாவுக்கு தான் வாய்ப்பு சென்றுள்ளது. ஆனால், அவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருப்பதால் இதில் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். அதன் பின்னர்தான் இந்த பட வாய்ப்பு லட்சுமி மேனனுக்கு சென்றதாக கூறப்படுகிறது.