உங்கள் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்த உதவும் எளிய வழிமுறை

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி ஆரோக்கியத்தை உயர்த்த உதவும் பொடி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை


வெந்தயம் - 250 கிராம்
ஓமம் - 100 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.