இந்தியாவின் இருமல் மருந்தில் 2 ரசாயனங்களுக்கு தடை விதிப்பு

இந்தோனேசியா: தடை விதிப்பு... இந்தோனேசியாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இருமல் மருந்தில் உள்ள இரண்டு ரசாயனங்களுக்கு தடை விதித்துள்ளது. காம்பியாவில் இருமல் மருந்து பல குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருமல் மருந்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.