டெங்குக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்குமாம் இந்த இலைச்சாறு

பொதுவாக கொசுக்கள் நம்மை கடிப்பதால் டெங்கு மலேரியா போன்ற பயங்கரமான நோய்கள் உண்டாகிறது .இந்த டெங்குவுக்கு ஆங்கில வைத்தியம் இருந்தாலும் ,சில இயற்கை வைத்த்தியமும் கை கொடுக்கிறது.

தற்போது தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே இதன் காரணமாக சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இதே போன்று அண்டை மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.டெங்கு காய்ச்சலுக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கிறது பப்பாளி இலைச்சாறு.

கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு பலராலும் பரிந்துரைக்கப்படும் பொதுவான ஒரு தீர்வு பப்பாளி இலைச்சாறு.கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் நம்மை கடிக்கும் பொழுது நமது ரத்தத்தில் பரவுகிறது.இந்த கொசு மூலம் பரவும்டெங்குவால் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கிறது.

இந்த நேரத்தில் நாம் பப்பாளி இலைச் சாற்றை அருந்தும் பொழுது அது ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.மேலும் கொசுவால் பரவும் மலேரியா ஜுரத்திற்கான எதிர்ப்பு பண்புகள் பப்பாளி இலைகளில் அதிக அளவு உள்ளது.பப்பாளி இலையில் காணப்படக்கூடிய அசிட்டோஜெனின் என்ற கலவை மலேரியா மற்றும் டெங்கு போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க உதவுகிறது.மேலும் நம் உடலில் கல்லீரலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது பப்பாளிப்பழம்.

அதுபோன்று ஆரோக்கியம் மிகுந்த பப்பாளி இலைச்சாறு கல்லீரலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இதன் மூலம் நீண்ட நாட்களாக இருக்கும் கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற நோய்கள் குணமாகிறது