கடற்கரை மணலில் நடப்பதால் ஏற்படும் பல்வேறு பலன்கள்

சென்னை: பல்வேறு பலன்கள்... கடற்கரை மணலில் செருப்பு அணியாமல் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்தால் பல்வேறு பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


வெறும் காலில் நடக்கும் போது பாதம் கணுக்கால் மற்றும் தடைகள் பலம் பெறும் என்றும் எனவே வெறும் காலில் நடந்தால் பல பிரச்சனைகள் நீங்கும் என்றும் வெறுங்காலில் நடந்தால் மூட்டுவலி குறையும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அளவு சீராகி விடும் என்றும் வெறுங்காலில் நடக்கும் போது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


சாதாரண தரையில் நடப்பதை விட கடற்கரை மணல் போன்ற மணல் இருக்கும் பகுதியில் அல்லது புல்வெளியில் நடந்தால் அதிக அளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்றும் உடல் பருமனை குறைக்க இது உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்