‌தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் வசம்பு

வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வசம்பு எப்பேர்பட்ட கொடிய விஷத் தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பசி அதிகமாக வசம்பைச் சுட்டு பொடியக்கி 1/4 கிராம் அளவு தேனில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் சாப்பிட்டு வர வேண்டும். தூள் செய்த வசம்பை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.

கிராமத்தில் உள்ளவர்கள் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

முன்னோர்கள் வீட்டில் எப்போதும் வசம்பு கட்டாயம் வைத்திருப்பார்கள். பிறந்த கைக்குழந்தைகளுக்கு வசம்பு உரசி தினமும் வாயில் வைப்பார்கள். அதனை வைக்க காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ, அலர்ஜியோ அல்லது விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக வசம்பு கொடுக்கப்படும்.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம். விஷம் அருந்தியவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று டீ ஸ்பூன் வசம்பை உடனேயே கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைக்கட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் பாதுகாக்கவும் இந்த வசம்பு பயன்படுகிறது.