கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டதாக தகவல்

கென்யா: கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கென்யா வனவிலங்கு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரம் தெற்கு கென்யாவில் பத்து சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் சனிக்கிழமை மட்டும் ஆறு சிங்கங்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.