இந்தியாவில் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

அந்த வகையில் மொத்தபாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 138 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 20,958 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது.

இதை அடுத்து தற்போது 1,43,384 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 604 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 54 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5,26,312 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 203 கோடியே 94 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 33,87,173 டோஸ்கள் அடங்கும்.