சுதந்திர தினம் ... சென்னையில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை:250 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ... தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துகழகம் (விழுப்புரம் கோட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பொதுமக்களின் வசதிக்காக வருகிற ஆகஸ்ட் 11, 12-ல் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம்,

இதனை அடுத்து விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக வருகிற ஆக.15ல் (செவ்வாய்க்கிழமை) 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இயல்பு நிலை திரும்பும் வரை தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதை கண்காணிக்க அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.