நியூயார்க்கில் டிரக்கை ஏற்றி 8 பேரை கொலை செய்த தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறை

நியூயார்க்: தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறை... அமெரிக்காவில் டிரக்கை ஏற்றி 8 பேரைக் கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு நியூயார்க் மான்ஹாட்டன் நகரில் நுழைந்த தீவிரவாதி ஒருவர் வாடகைக்கு எடுக்கப்பட்ட ட்ரக்கைப் பயன்படுத்தி பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினான். இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த சைபுல்லா சைபவ் என்பதும், ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் சைபவ்க்கு தொடர்ச்சியாக 8 ஆயுள் தண்டனைகள் உள்பட 10 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.