கனடாவில் ஒரே நாளில் 285 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எட்டு ஆயிரத்து 945 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆறாயிரத்து 365பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஆயிரத்து 574பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, இரண்டு ஆயிரத்து 253பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கியூபெக் மாகாணத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 59,458 ஆகவும் 5,678 பேர் இறந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.