வெளிநாடுகளில் இருந்து 299 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம் 299 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் - 668 என்ற விமானத்தில் 15 பேர் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் 10 பேர் பயணிகள் ஆவர். மீதமுள்ள ஐந்து பேர் இலங்கையில் உள்ள இத்தாலிய மற்றும் பிரெஞ்சு தூதரகங்களின் அதிகாரிகள் ஆவர்.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -226 என்ற விமானத்தில் 289 இலங்கையர்கள் அதிகாலை 5.30 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களுள் ஆறு குழந்தைகளும் அடங்குவர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.