கொரோனா பாதிப்பிலிருந்து 479 பேர் குணமடைந்தனர்

479 பேர் குணமடைந்தனர்... இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 479 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 69ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 669 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 771ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த தொற்றுக்கு உள்ளான 83 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.