கடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 510 பேர் கொரோனாவால் பாதிப்பு

510 பேர் பாதிப்பு... கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 358 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஐந்தாயிரத்து 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 234பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 50பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.