மார்ச்சில் 69.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்

சென்னை: 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை தடையில்லாமல் அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியையும் ஏற்பாடுத்தித் தருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6.30 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதனை அடுத்து இது பற்றி மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 1ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், மார்ச் 1ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை மொத்தம் 69,99,341 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ச் 10-ம் தேதி 2,58,671 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.