மீன்வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 7 பேர் கைது

சிவகங்கை: மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்த பழனிமுருகன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இருந்த போது வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து ரியாஸ் என்ற கல்லூரி மாணரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பழனி முருகனின் மகன் ஹரி காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள ஒரு பானிபூரி கடையில் சாப்பிடும் பொழுது ரியாஸ் என்ற இளைஞரை தாக்கியுள்ளார்.

இதற்கு பதிலடியாக ரியாஸ் தனது நண்பர்களுடன் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது.