தமிழகத்தை அச்சுறுத்தும் மிக்ஜம் புயல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எனவே அதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிகொண்டு வருகிறது.

இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனை அடுத்து இது சென்னையில் இருந்து தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது.


எனவே அதன் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த மிக்ஜம் புயல் வருகிற 4ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து வருகிற 5ம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.