தெருநாய் கடித்து குதறியதில் 7 மாத குழந்தை பரிதாப பலி

லக்னோ: தெருநாய் கடித்து 7 மாத குழந்தை இறந்த சம்பவம் நெய்டாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நொய்டா ஒரு நகரம். நகரின் 100வது செக்டரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணி நடந்தது. கட்டிடத் தொழிலாளிகளான தம்பதி, 7 மாத குழந்தையுடன் வேலைக்கு வந்தனர்.

தம்பதியினர் தங்கள் குழந்தையை கட்டுமான தளத்தின் அருகே விட்டுவிட்டு கட்டிட வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த தெருநாய் தனியாக இருந்த 7 மாத கைக்குழந்தையை கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில் குழந்தை பலத்த காயம் அடைந்தான்.

கட்டிடத் தொழிலாளர்களான பெற்றோர் குழந்தை அழுவதைப் பார்த்து ஓடி வந்தனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தெருநாய்களிடம் இருந்து குழந்தையை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பலத்த காயங்களுடன் குழந்தை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தெருநாய் கடித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.