குழந்தை இறந்த சோகத்தில் இருந்த விவசாயிக்கு கொரோனா ஏற்பட்டதால் விரக்தியில் தற்கொலை

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேசம் கோதாவரி மாவட்டம் எலுரு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் கொரோனா காரணமாக சேர்க்கப்பட்டார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இவர் திடீரென மனஅழுத்தம் காரணமாக மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட இவருக்கு இரட்டை குழந்தைகள் இருந்துள்ளது. கடந்த வாரம் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளன. இந்த சோகத்தில் இருந்த அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மன அழுத்தம் ஏற்பட்ட தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனஆழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனா காரணமாக மூன்று டஜனுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.