கொரோனா ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபகரமான ஒன்று. நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சொந்த ஊரை அடையும் நிலை.
அந்த வகையில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை அழைத்து கொண்டு டில்லியில் இருந்து 1200 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து தனது சொந்த ஊரான பீஹாரின் தர்பங்காவிற்கு சென்றுள்ளார்.
தந்தை மீது அவர் வைத்திருந்த பாசம், மனதின் உறுதி, வைராக்கியம் இதில் வெளிப்பட்டுள்ளது. எட்டு நாட்கள் இப்படி பயணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சிறுமியாக இருந்தாலும் இத்தனை கி.மீட்டர் தூரத்தை தன் தந்தையை கேரியரில் அமரவைத்து ஓட்டி வருவது என்பது எத்தகைய மன வலிமை கொண்டது.