ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக ஈரானிய துருப்புகள் குழு களம் இறங்கியுள்ளது

ரஷ்யா: ரஷ்யாவின் ரகசிய திட்டம்... உக்ரைன் போரில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக எலைட் ஈரானிய துருப்புகள் குழு உக்ரைனின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உக்ரைன் ரஷ்யா போர் தற்போது கிழக்கு பகுதி நகரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், காமிகேஸ்(Kamikaze) ட்ரோன்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த ரஷ்ய வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக எலைட் ஈரானிய துருப்புகள் உக்ரைனின் முன்வரிசைக்குள் ரகசியமாக நுழைந்து இருப்பதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இதற்காக 50 இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வல்லுநர்கள் பணியில் இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உக்ரேனிய நகரங்களைத் தாக்கும் நூற்றுக்கணக்கான ஷாஹெட்-136 ட்ரோன்களுடன் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில் எலைட் ஈரானிய துருப்புகள் விமான பாதையை கட்டுப்படுத்தியதாகவும், அவை ஷாஹெட்-136 ட்ரோன் குழுக்களால் குறி வைக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானிய துருப்புகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.