விஜயவாடாவுக்கு காரில் தங்கம் கடத்தியவர் சிக்கினார்

சென்னை: காரில் தங்கம் கடத்தல்...சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு காரில் தங்கம் கடத்திய நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 11 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து கார் மூலம் விஜயவாடாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 25ஆம் தேதி விஜயவாடா அருகே பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறையினர், சென்னையில் இருந்து வந்த காரை மடக்கிப் பிடித்து 4.3 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டிலிருந்து 6.8 கிலோ தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளில் வெளிநாட்டு முத்திரைகளை உருகச் செய்து விஜயவாடாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.