தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து

தென்கொரியா: வணிக வளாகத்தில் தீ... தென்கொரியாவில் உள்ள டேஜியோன் நகரத்தில், வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

நேற்று காலை 7 மணியளவில் வணிக வளாகத்தின் அடித்தளத்தில் திடீரென பற்றிய தீ, மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியது.

உடனடியாக, வணிக வளாகத்திற்கு அருகே இருந்த கட்டிடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அடித்தளத்தில் இருந்த மின்சார வாகனம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தீவிபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.