கடந்த மார்ச் மாதத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து மொத்தம் 17¼ லட்சம் பேர் பயணம்

சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். அதில் 9,413 உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும், 2,609 பன்னாட்டு விமானங்களில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேரும் விமானங்களில் பயணம் செய்துவுள்ளனர்.

இதையடுத்து உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூரு, மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும், பன்னாட்டு பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களில் அதிகமான பயணித்துள்ளனர்.

மேலும் இந்தப் பயணிகளின் பெரும்பாலானவர் சுற்றுலா பயணிகள் ஆகும். தொழில், வர்த்தகம், பணிகளின் நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக உயர்ந்துள்ளனர். சென்னையிலிருந்து பல நாடுகள் நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாகவே பயணிகள் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

அதிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு உயரும் என தெரிகிறது. தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெருமளவு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.