கொரோனாவிலிருந்து குணமடைந்த 765 பேர் வீடு திரும்பினர்

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள்... தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,313 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இன்றும் ஒரே நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தத் தொலையில் சென்னையில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. மேலும் இதுவரை குணமடைந்தவர்கள் 11,313 பேர் என்றும் தெரியவந்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் அளவு 55.87 சதவீதமாக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது.