அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது ... தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இன்று தமிழகத்தில் கோயம்புத்தூர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நாளை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருச்சியின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அடுத்தாக அக்டோபர் 16ஆம் தேதி மதுரை, தூத்துக்குடி விருதுநகர், திண்டுக்கல்,

மேலும் சிவகங்கை, தேனி, தென்காசி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையானது வருகிற அக்டோபர் 18ஆம் தேதி வரை நீடிக்கும் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.