கறுப்பர் கூட்டம் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கடும் கண்டனம்... கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சேனலின் செயலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தின் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக அந்த சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது போன்று, அவர்கள் பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்கப்பட்டது.

இந்து கடவுள்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் கறுப்பர் கூட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனத் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழிய வேண்டும்... எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!, எனப் பதிவிட்டுள்ளார்.