நடிகை கங்கனா ராணாவத் ஆஜராக மும்பை போலீஸ் சம்மன்

நடிகை கங்கனா ராணாவத் நாளை ஆஜராக வேண்டும் என்று மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

கலவரத்தை தூண்டும் கருத்துப்பதிவு தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத்திற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. . 'டுவிட்டர்' வாயிலாக, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த சில தினங்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மும்பை போலீசார் கங்கனா ராணவத் அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் இருவரும் நாளை (அக்.22) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.