விநாயகர் சதுர்த்தி...சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்கள் ... தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக சென்னை இருக்கிறது. இங்கு வெளி மாவட்டங்களிலிருந்து பலர் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வந்து இருக்கின்றனர்.

இதையடுத்து அவர்கள் முக்கிய பண்டிகை நாட்களிலும் தொடர் விடுமுறை வந்தாலும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள். இந்த நிலையில் வருகிற செப். 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது.


அதனால் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல மக்கள் திட்டமிடுகின்றனர். அவர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது மட்டுமில்லாமல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.