நாளை முதல் அரசு தொடக்க பள்ளிகளில் LKG மற்றும் UKG மாணவர் சேர்க்கை துவக்கம்


சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரையிலும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, பள்ளி விடுமுறை முடிவடைந்து புதன்கிழமை வழக்கம் போன்று வகுப்புகள் துவங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை முடிவடைந்த பிறகே எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

அந்த வகையில், இந்தாண்டும் ஆயுதபூஜை முடிவடைந்து நாளை விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தவுள்ளதாக கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

இதனை அடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் நாளை மாணவர்சேர்க்கையொட்டி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.