காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுக வலியுறுத்தல்

அதிமுக வலியுறுத்தல்... ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் நம்பிக்கையை இழந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், புதுச்சேரியை ஆளாக்கூடிய காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் மீது அவ்வப்போது தனது சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தனது சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த ஒரு பலவீனமான அரசாக இந்த அரசு உள்ளது. ஆகவே இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் துணைநிலை ஆளுநர் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அரசு தனது பெரும்பான்னையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தொடர்ந்து கூட்டணி கட்சி மற்றும் சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் மீது பல்வேறு அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வருவதால் முதல்வர் நாராயணசாமி தனாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.