பெங்களூரு: ஜெர்மன் விமான நிறுவன அலட்சியத்தால் பெங்களூரு விமானத்தை டாக்டர் கிஷோரால் பிடிக்க முடியாமல் போனது. எனவே அவருக்கு விமான நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் கே.எஸ்.கிஷோர் (54). 2014-ம் ஆண்டு மருத்துவத்துறை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றார். பின்னர், அவர் ஆர்லாண்டோவிலிருந்து பிராங்பேர்ட்டுக்கு பறந்தார்.
இந்நிலையில் அவர் பயணம் செய்த ஜெர்மன் விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு தாமதமாக வந்தது. பின்னர் பெங்களூரு செல்லவிருந்த விமானத்தை பிடிக்க முயன்றார். ஆனால் 15 நிமிடங்களில் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் அவர் விமான நிலையத்தில் காத்திருந்து பின்னர் மற்றொரு விமானத்தில் பெங்களூரு சென்றார். இந்நிலையில் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜெர்மன் விமான நிறுவனத்தின் அலட்சியத்தால், பெங்களூரு செல்லும் விமானத்தை தவறவிட்டதாகவும், இதுகுறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஜெர்மன் விமான நிறுவனத்தின் அலட்சியத்தால் பெங்களூரு விமானத்தை டாக்டரால் பிடிக்க முடியாமல் போனது. எனவே கிஷோருக்கு விமான நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.