மணிப்பூரில் இன்று அனைத்து கட்சி கூட்டம்... அமித்ஷா பங்கேற்கிறார்

டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

மணிப்பூரில் மொய்தி மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்கிறது. இந்த வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று கூடுகிறது.

கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மாலை 3 மணிக்கு கூடும்.

இதுகுறித்து காங்கிரஸ் கூறியதாவது ,அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முடிவு “மிகவும் தாமதமானது” என்று கூறிய காங்கிரஸ், அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் இல்லாத நேரத்தில் கூட்டத்தை நடத்துவதற்கான நடவடிக்கை, இந்த சம்பவங்கள் அவருக்கு முக்கியமில்லை என தோன்றுகிறது ,என கூறியது .