1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ராஜஸ்தான் அரசு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக அறிவிப்பு

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனை அடுத்து அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அவர்கள் அறிவித்தார்.

எனவே அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. மேலும் 3 ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது.

இதை அடுத்து இதற்கான திட்ட செலவு ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். இதன் இடையே, இந்த திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் பண்டிகை காலம் தொடங்குவதற்குள், முதல்கட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது,