அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார் அன்வர் ராஜா

சென்னை: மீண்டும் இணைந்தார்... அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார் அன்வர் ராஜா.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அன்வர் ராஜா 2021 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இணைப்புக்கு பின்னர் அன்வர்ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஓராண்டுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டேன். இப்போது நான் மீண்டும் இணைந்துள்ளேன்.

கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக நான் வருத்தப்படவில்லை. கட்சியில் இருந்து விலகி இருந்தாலும், கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன், யாரும் தடுக்கவில்லை; கட்சியில் உள்ள அனைவருடனும் தொடர்பில் இருந்தேன்.

இந்தியாவில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன. கட்சியில் எனக்கு எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றார்.