ட்விட்டரில் தற்காலிக புதிய கட்டுப்பாடுகளை விதித்த எலான் மஸ்க்

புதுடெல்லி: ட்விட்டர் சேவை செயலிழந்துள்ளதாக பயனர்கள் தெரிவிக்கும் வகையில் எலோன் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 இடுகைகளைப் படிக்கலாம், மற்ற பயனர்கள் 1,000 இடுகைகளை மட்டுமே படிக்க முடியுமாம்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ட்விட்டர் உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலகளவில் ஐந்தில் ஒருவர் ட்விட்டர் கணக்கு வைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ட்விட்டர் தளம் திடீரென உலகம் முழுவதும் முடங்கியது. இதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ட்விட்டரில் தகவல்களை அனுப்பவோ அல்லது பெறவோ முடியவில்லை. சிக்கலைத் தீர்க்க ட்விட்டர் தொழில்நுட்ப ரீதியில் வேலை செய்கிறது.

இந்நிலையில், ட்விட்டர் சேவை செயலிழந்துள்ளதாக பயனர்கள் தெரிவிக்கும் வகையில் எலோன் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் ஒரு நாளைக்கு 10,000 இடுகைகளைப் படிக்கலாம், மற்ற பயனர்கள் 1,000 இடுகைகளை மட்டுமே படிக்க முடியும்.

புதிய பயனர்கள் 500 இடுகைகளை மட்டுமே படிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற தகவல்களை நீக்குவதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலோன் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.