மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

சென்னை: கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ..... தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சுமார் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
எனவே அதன்படி இந்தாண்டுக்கான மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 -ஆம் தேதி தொடங்கியது.

எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன் பிடித்து துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதனை அடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இச்சூழலில் மீன் பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக படகுகளுக்கு பூஜை செய்து மீண்டும் மீன்பிடிக்க மீனவர்கள் மிகவும் உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.