திறைசேரி உண்டியங்கள் ஏலம் வரும் 27ம் தேதி நடக்கிறது

கொழும்பு: உண்டியல்கள் வழங்கும் ஏலம்... 130,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 60,000 மில்லியன் ரூபாயிற்கும் 182 நாட்களில் முதிர்வடையும் 35,000 மில்லியன் ரூபாயிற்கும் 364 நாட்களில் முதிர்வடையும் 35,000 மில்லியன் ரூபாயிற்கும் ஏலம் விடப்பட உள்ளன.

வரும் 30ம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான ஏலத்திற்கான பணம் செலுத்தும் திகதி ஜூலை 4ஆம் திகதிக்கு மாற்றப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.