பெருவில் பறவை காய்ச்சல் பாதிப்பு... பென்குயின்கள் இறந்தன

இலிமாய்: பறவை காய்ச்சல் பாதிப்பு... பெருவில் பாதுகாக்கப்பட்ட எட்டு கடலோரப் பகுதிகளில் 55,000க்கும் மேற்பட்ட பெலிகன்கள் மற்றும் பென்குயின்கள் இறந்து கிடந்தன. பரிசோதனையில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதே கடல் பகுதிகளில் 585 கடல் சிங்கங்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவைகள் பறவை காய்ச்சலால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

செர்னோப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்த கடல் சிங்கங்களின் உடலில் H5N1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், பறவைக் காய்ச்சல் காரணமாக கடற்கரையில் உள்ள கடல் சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகளுடன் பொதுமக்கள் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது