போன் வாங்கு... பீர் இலவசம்; கடையை பூட்டி சீல் வைத்த போலீசார்

உத்தரபிரதேசம்: கடைக்கு சீல்... உத்தரபிரதேசத்தில் ஸ்மார்ட்போன் வாங்கினால் இலவச பீர் என்று விளம்பரம் செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இலவச விளம்பரங்கள் என்பது பலர் தங்கள் வணிகத்தை லாபகரமாக மாற்றவும் அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்கவும் பயன்படுத்தும் ஒரு உத்தி. இலவசங்களைப் பெறுவதற்காக பொருட்களை வாங்குபவர்கள் பலர் உள்ளனர்.

ஒவ்வொரு வணிக உரிமையாளரும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல கவர்ச்சிகரமான இலவச விளம்பரங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உத்திரபிரதேசத்திலும் தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக ஸ்மார்ட்போன் விற்பனையாளர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது கடையில் ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு டின் பீர் இலவசம் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து இலவச பீர் வாங்க ஏராளமானோர் செல்போன் கடையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து மக்களை வெளியேற்றி கடையின் உரிமையாளர் மவுரியாவை கைது செய்து கடைக்கு சீல் வைத்தனர். வியாபாரத்தை பெருக்க அறிவிக்கப்பட்ட இலவசம் கடைக்கு சீல் வைக்கும் நிலைக்கு தள்ளி விட்டது.