தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கனமழைக்கு வாய்ப்பு .... ஆண்டுதோறும் தமிழகத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில், கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. மேலும் தற்போது வங்க கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனால் வட தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதை தொடர்ந்து தென் தமிழகத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலை கொண்டு இருப்பதால் மழை பாதிப்பு குறைவாக இருக்கிறது.

இதனை அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.