தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் 8 மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரியில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மன்னார் பகுதியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறாரகள். அங்கு பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காட்டில் 9 செ.மீ., மாத்தூரில் 6 செ.மீ., நெய்வேலி, வேப்பூரில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.