இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .... தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது.

இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து வருகிற 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும். எனவே இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் ,திருவாரூர் , தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்கால் பகுதியில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளது.

மேலும் தற்போது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.