முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி மண்டபம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ராமநாதபுரம் : மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து அதன்படி மதுரை முனி சாலையில் டி.எம். சௌந்தரராஜனின் முழு உருவ வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் புறப்பட்டு செல்லும் முதல்வர் ஸ்டாலின் பேராவூரில் ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் ,திருநெல்வேலி ,தென்காசி ,தூத்துக்குடி,

மேலும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த தென் மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் .அதைத்தொடர்ந்து நாளை மண்டபம் முகாம் கலோனியா பங்களாவில் நடைபெறும் மீனவர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் வருகையையொட்டி ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விடுமுறையை ஈடுசெய்ய மண்டபம் ஒன்றியத்தில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.