முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்லகிறார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு பயணம் மேற்கொள்கிறார். மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்கவுள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இதனை அடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிலையில் இன்று மாலை சென்னையிலிருந்து மதுரைக்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து காரில் மதுரை முனி சாலை பகுதிக்கு வரும் அவர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ள பழம்பெரும் பாடகர் டி எம் சௌந்தரராஜன் திருவுருவ லையை திறந்து வைக்கிறார்.


எனவே இதன் பின்னர் நாளை காலை 10 மணி அளவில் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் புறப்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

மதியம் 1 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயணியர் தங்கும் விடுதிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெறும் தென் மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.மேலும் காலை 10 மணி அளவில் மண்டபம் அருகில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.